Wednesday, March 18, 2009

ஏதோ சொல்லணும் போல இருக்கு..பாகம் 3

வேலா: நீதானடி என் பொண்டாட்டி..அதான் உன்கிட்ட கேட்டேன்.
கவி: மறுபடியும் ஒரு தடவை சொல்லு
வேலா: நீதான் என் பொண்டாட்டின்னு சொன்னேன், புரியலையா...
கவி: ம்ம்ம்...பார்ப்போம் இது எத்தனை நாளைக்குன்னு..
வேலா: நான் பொய் சொல்றேன்னு நினைக்கறியா?
கவி: நான் அப்படி நினைக்கல.. ஆனா...
வேலா: நீ என்ன நினைக்கறன்னு எனக்கு புரியுது, அதை ஞாபகப்படுத்தி என்ன மூட் அவுட் பண்ணாத ப்ளீஸ்..
கவி: ம்ம்ம்... ஆனா எனக்கு ரொம்ப பயமா இருக்குடா.. நீ எங்க என்ன விட்டு சீக்கிரமே பிரிஞ்சிடுவியோன்னு தோணுது...
வேலா: ம்ம்ம்...பிரிவொன்று நேரும் என்று தெரியும் பெண்ணே என் பிரியத்தை அதனால் குறைக்க மாட்டேன்.
கவி: அப்புறம்
வேலா: எரியும் உடலென்று தெரியும் பெண்ணே என் இளமைக்கு தீயிட்டு எரிக்க மாட்டேன்.
கவி: ஹேய் வேலா..
வேலா: ம்ம்ம். சொல்லு..
கவி: ஐ லவ் யு டா...
வேலா: ஆயிரம் தடவை ஐ லவ் யு.. போதுமா... நான் கேட்டத நீ இன்னும் கொடுக்கவே இல்ல..
கவி: என்னது?
வேலா: கிஸ்
கவி: ம்ம்ப்ச்... போதுமா..
வேலா: ம்ம்ஹூம்.. போதாது..
கவி: ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்...
வேலா: ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்... ம்ம்ப்ச்...
கவி: புதுசா பொறந்த மாதிரி இருக்கு..
வேலா: எனக்கும்...ஆமா டைம் என்ன, எனக்கு தூக்கமா வருது..
கவி: தூங்கதடா.. இப்பதான் டைம் மூணு மணி ஆகுது..
வேலா: உன்ன அப்படியே கட்டி புடிச்சு...
கவி: கட்டி புடிச்சு...
வேலா: தலையில இருந்து கால் வரைக்கும்...
கவி: உனக்கு தூக்கம் வருதுன்னு சொன்ன இல்ல.. போய் தூங்கு போ..
வேலா: நீ எப்பவுமே இப்படிதான்.. நல்ல மூட் வரும்போதுதான் பேச மாட்ட..
கவி: ம்ம்ம்ம்ம்....குட் நைட் டா...
வேலா: குட் நைட் செல்லம்...பாய்..

ஒருவழியாக முடிந்த செல்போன் உரையாடலை தொடர்ந்து தூங்கலாமென்று எண்ணிய வேலனுக்கு சுத்தமாக தூக்கமே வரவில்லை. ஏதோ ஒரு புரிந்துகொள்ள முடியாத மனநிலை அவனை முழுவதுமாக ஆட்கொண்டிருந்தது. அது சந்தோஷமும் இல்லாமல் அல்லது மன அழுத்தமும் இல்லாமல் ஒரு புதுவிதமான, இதுவரை அவன் அறிந்திராத ஒரு மனநிலையாகும். அவனது ஐம்புலன்களும் கவியினுடைய பார்வைக்கும் அல்லது அவளது பேச்சிற்க்கும் கட்டுண்டு இருப்பதை போல உணர்ந்தான்.

யாரிவள், எனக்கும் இவளுக்கும் என்ன தொடர்பு, ஏதாவது பூர்வஜென்ம பந்தத்தின் நீட்சியா அல்லது எனக்காகவே அந்த கடவுளால் உருவாக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டவளா என வழக்கமாக காதலில் விழுந்த என் நண்பர்கள் புலம்பும்போது அல்லது உளரும்போது நான் அவர்களை பரிகாசம் செய்தது நினைவிற்கு வந்தது.
ஆஹா... இத்தனை நாள் அவர்களை முட்டாள்கள் என எண்ணிய நான் எத்தனை பெரிய முட்டாள் என வேலன் எண்ண தொடங்கினான்.
ச்சே... எப்படி புரண்டு படுத்தாலும் இந்த பாழா போன தூக்கம் மட்டும் வரவே மாட்டேங்குதே.. நான் ஏன் இவளை பத்தி மட்டுமே நினைச்சிக்கிட்டிருக்கேன்..
என்னை தவிர இந்த உலகத்துல எல்லா ஜீவராசிகளும் தூங்கிக்கொன்டிருககிறதே என வேலன் தனக்குள் புலம்பிக்கொண்டிருந்தான்.

அவனது மூளை இவளை தவிர வேறு எதனை பற்றியும் சிந்திக்க மறுத்திருந்தது. அவன் இது வரை யாரெல்லாம் முக்கியம் என நினைத்திருந்தானோ அவர்களையெல்லாம் கவி அனாவசியமாக முந்திக்கொண்டு முதலிடத்தில் வந்துவிட்டிருந்தாள். ஒவ்வொரு இரத்த அணுக்களிலும், செல்களிலும் அவளே நிறைந்திருப்பதாக ஒரு உணர்வு. அவளை தவிர இந்த உலகத்தில் எதுவுமே அவனுக்கு முக்கியமாக படவில்லை. இந்த அளவிற்கான வேதிமாற்றத்தை அவனது உள்ளத்தில் நிகழ்த்தியது எது. அவளது அழகா? நாம்தான் பல அழகான பெண்களை கடந்திருக்கிறோமே, அவர்களெல்லாம் நம்மை ஆட்கொள்ளவில்லையே.. அவர்கள் மீது குறைந்த பட்ச அன்பு கூட வரவில்லையே.. இவளிடம் மட்டும் எப்படி நான் முழுவதுமாக சரணடைந்தேன்.

ஐயோ நான் ஏன் இவள பத்தி மட்டுமே யோசிச்சிட்டு இருக்கேன்.. நானும் காதல் பைத்தியமாகிட்டேனா... இருக்கட்டுமே..


"நீ என்ன லூசா??"
கழுத்தை சாய்த்து
பார்வை இறக்கி
நீ கேட்ட
அழகுக்காகவே
நான் பைத்தியமாகலாமடி...!!

இப்படியான எண்ண ஓட்டங்களின் பெருங்க்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த வேலன் கொஞ்சம் போராட்டத்திற்கு பின் அவனையும் அறியாமல் தூங்கியும் போனான். கவியின் நினைவு குதிரைகளும் சற்றே ஒய்வு கொள்ள தொடங்கியிருந்தது அடுத்த நீண்ட பிரயாணத்திற்கு தயாராவதற்காக...

(தொடரும்)

Tuesday, March 3, 2009

ஏதோ சொல்லணும் போல இருக்கு..பாகம் 2

ரயில் நிலையத்தை விட்டு வெளியே வந்த நான் கொஞ்சம் கொஞ்சமாக என்னுடைய சுய நினைவுக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். ஆஹா ரொம்ப நேரம் ஆகிவிட்டது என நினைவுபடுத்தியது அப்பாவின் செல் போன் அழைப்பு. வீட்டிற்கு வந்து சீக்கிரமாக இரவு உணவை முடித்துவிட்டு எனது அறைக்குள் சென்றதும் கவியிடமிருந்து அழைப்பு வந்தது.

கவி: வீட்டுக்கு வந்துட்டியாடா, மழையில மாட்டிக்கிட்டியா என்ன?...
வேலா: மழையிலெல்லாம் மாட்டல, உன்கிட்டதான் வசமா மாட்டிக்கிட்டேன்.. இனி என் வாழ்க்கையிலே நிம்மதியே இருக்கப்போரதில்ல..
கவி: ஏன் அப்படி சொல்லுற?
வேலா: உன்ன இனிமே என்னால இந்த ஜென்மத்துல மறக்க முடியாது கவி..
கவி: என்னாலயுந்தாண்டா... வேலா, என்ன உனக்கு புடிச்சிருக்காடா...
வேலா: என்ன உளர்ற..நீ என் உயிர்டி..
கவி: அது இல்ல, என் முகமே ஞாபகம் இல்லன்னு சொன்னே, இப்ப நான் பாக்க எப்படிடா இருக்கேன், என்ன உனக்கு உண்மையிலேயே பிடிச்சிருக்கா சொல்லு...
வேலா: நான் கவியதான் லவ் பண்றேன்.. கவியோட உடம்ப இல்ல.. புரிஞ்சுதா.. நீ எப்படி இருந்தாலும் என் செல்லகுட்டிதான்..
கவி: (மௌனம்)
வேலா: ஏய்.. என்ன ஆச்சு..
கவி: ஒன்னும் இல்லடா.. எனக்கு பேச்சு வரல..வேலா..வேலா...
வேலா: ம்ம்.. சொல்லு...
கவி: ஐ லவ் யு டா...
வேலா: மீ டூ குட்டி..
கவி: நீ ஏன் ரயில் உள்ள வரல.. நான் என் லக்கேஜ வச்சிட்டு உடனே திரும்பி கதவு பக்கம் வந்தேன்.. நீ மட்டும் அங்க இருந்திருந்தா உன்ன அப்படியே கட்டிபுடிச்சி முத்தம் கொடுத்திருப்பேன்..
வேலா: அங்க நிறைய பேர் இருந்திருந்தாங்க..
கவி: யார் இருந்தா என்ன, நான் நிச்சயம் கொடுத்திருப்பேன்..
வேலா: அம்மா என்ன பண்றாங்க?
கவி: அவங்க படுத்து தூங்கறாங்க... நான் என் பெர்த்ல இருக்கேன்.. ஏசி கம்பார்ட்மென்ட் என்பதால் எந்த இரைச்சலும் இல்ல..
வேலா: ஹேய் கவி, இன்னிக்கி எனக்கு எவ்வளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா..
கவி: எவ்வளவு சந்தோஷமா இருக்கு?
வேலா: எனக்கு சொல்ல தெரியல, உன்ன இன்னிக்கி ரொம்ப நாளைக்கு அப்புறம் பார்த்தப்போ, எனக்கு அப்படியே இதயமே நின்னு போச்சு.. நீ எவ்வளோ அழகா இருந்த தெரியுமா..
கவி: என்ன புடவையில பார்த்தின்னா நீ மயக்கம் போட்டு கீழ விழுந்துடுவேன்னு நினைக்கிறேன்..
வேலா: அதுவும் இல்லாம பார்த்தேன்னா ஒருவேளை மயக்கம் போட்டு விழுந்துடுவேன்..
கவி: அய்யே.... சீ போடா...
வேலா: நீ ஏன் கவி என் வாழ்க்கையில வந்தே? அதுவும் இவ்வளவு நாள் கழிச்சு? வேட்டையாடு விளையாடு படத்துல கமல் சொல்லுறாப்போல "எத்தனையோ காலம் தள்ளி நெஞ்சோரம் பனித்துளி"..
கவி: வேலா.. நீ எனக்கு கிடைப்பியா? கிடைக்கமாட்டியா? சொல்லு..
வேலா: நான் உனக்கு கிடைப்பேன், நீதான் எனக்கு கிடைக்க மாட்ட..
கவி: புரியல..
வேலா: போக போக புரியும்..
கவி: டேய்.. ஒரு நிமிஷம்.. அம்மா பாக்குறாங்க... நான் அப்புறம் கூப்புடறேன்.. தூங்கிடாதே..
வேலா: சரி, எனக்கும் பாத்ரூம் போகணும்...

மணி சரியாக நடு இரவு பன்னிரண்டு ஆகி அரை மணி நேரம் முடிந்துவிட்டது..

கவி மீண்டும் அழைக்க..

கவி: என்னடா தூங்கிட்டியா..
வேலா: இல்லப்பா.. நான் உன்ன நினைச்சி..
கவி: என்ன நினைச்சி...
வேலா: ஒன்னும் இல்ல விடு..
கவி: இப்போ சொல்லலேன்னா நான் உன்கூட பேசவே மாட்டேன் தெரிஞ்சுக்கோ..
வேலா: இதையே சொல்லியே என்ன மிரட்டிடுற..
கவி: சொல்லு...
வேலா: மூன்றாம் பிறை படத்துல இருக்குற கண்ணே கலைமானே பாட்டுல ஒரு வரி வரும், அதை நினைச்சு பார்த்தேன்... எனக்கு கண்ணெல்லாம் கலங்கிடுச்சு...
கவி: என்ன வரி அது..
வேலா: "உனக்கே உயிரானேன், எந்நாளும் எனை நீ மறவாதே" அந்த வரிதான்... என்ன மறந்துடுவியா கவி..
கவி: இந்த ரயில்ல இருந்து குதிச்சிட்டா நீ என்ன நம்புவியா வேலா...
வேலா: ஏன் இப்படி பேசுற..
கவி: பின்ன என்ன, நீ மட்டும் ஏன் என்ன ஹர்ட் பண்றமாதிரி பேசுற..
வேலா: சரி இனிமே பேசமாட்டேன்.. ஆனா நீ இன்னும் என் கேள்விக்கு பதில் சொல்லவே இல்ல..
கவி: என்ன கேள்வி?
வேலா: என்ன மறந்துடிவியான்னு கேட்டேன்..
கவி: சத்தியமா மறக்க மாட்டேன்..
வேலா: (ஒரு பெருமூச்சு)
கவி: ஹேய், நம்ம ரெண்டு பேரோட கெமிஸ்ட்ரி சூப்பரா இருந்துச்சிடா..
வேலா: அப்படியா.. அப்படியே பிசிக்சும் சூப்பரா இருந்தா நல்ல இருக்கும்..
கவி:ம்ம்...
வேலா: ம்ம்ம்ம்ம்....
கவி: ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்.....
வேலா: ம்ம்ம்ம்ம்....
கவி: ஏய், உனக்கு என்ன ப்ளட் க்ரூப்டா..
வேலா: ஒ பாசிடிவ்
கவி: எனக்கும் ஒ பாசிடிவ் தான்..
வேலா: ஒ க்ரேட்..
கவி: நம்ம ரெண்டு பெரும் கொஞ்சம் ப்ளட் எக்சேஞ் பண்ணிக்குவோமா...
வேலா: எதுக்கு...
கவி: உன் ரத்தம் என் உடம்புல ஓடனும்டா...
வேலா: முடியல... சத்தியமா சொல்றேன் கவி... நீ சொன்னினா நான் அப்பவே செத்துடுவேன்.. நான் பொய் சொல்லல... நான் உன்கிட்ட இருந்து எதையுமே எதிர்பாக்கல.. எதையுமே.. நீ கொஞ்சம் கொஞ்சமா என் ரத்த்திலியே கலந்துட்டே..நான் உள்ளர்றேன்னு நினைக்கிறேன்... எனக்கு இப்போ அலங்காரமா பேச தெரியல..ஐ லவ் யூடி.. ஐ லவ் யு...ஐ லவ் யு...ஐ லவ் யு... ஐ லவ் யு... ஐ லவ் யு...ஐ லவ் யு...
கவி: நிச்சயமா நம்ம லவ்வ இந்த உலகத்துல யாருமே புரிஞ்சிக்க போறதில்ல...
வேலா: உனக்கு புரிஞ்சா போதும்... ஹேய் கவி, எனக்கு ஒரு கிஸ் கொடேன்..
கவி: அதை நீ போய் உன் பொண்டாட்டிகிட்ட கேளு..

(தொடரும்)

Friday, February 27, 2009

ஏதோ சொல்லணும் போல இருக்கு..

எனது முதல் பதிவை துவங்குவதற்கு முன் என்ன எழுதுவது என யோசித்துக்கொண்டே கழித்த முன்னிரவை நினைத்து பார்க்கையில் தோன்றும் எண்ண அலைகளை எழுதினாலே தீராத பக்கங்கள் தேவைப்படும் என்பதை நினைத்து பார்க்கும்போது எழுத தேவைப்படும் விஷயங்களும் நிறையவே உள்ளன என்பது கண்கூடு. எழுதப்படும் எந்த விடயமாக இருந்தாலும் அதற்க்கு பல்வேறு வண்ணங்கள் பூச காத்திருக்கும் இந்த தமிழ் சமுதாயத்தில், நானும் தைரியமாய் எழுத வந்துவிட்டேன் என நினைக்கும்போது தோன்றும் பரவசத்திற்க்க்காகவே நிச்சயம் நாமும் எழுத வேண்டும் என தோன்றுவதை மறுக்க முடியவில்லை.

சில விடயங்களை எழுதும்போது மட்டும் ஏதோ ஒரு மன பாரத்தை இறக்கி வைத்ததை போல் தோன்றும். நானும் அது போல ஒரு விடயத்தை பற்றியே எழுத வேண்டும் என கூறும் எனது உள்ளுணர்வுக்கு கட்டுப்பட்டவனாய் ஆரம்பிக்கிறேன்.

அந்த ஒரு அழகிய கோடைக்கால பிந்தைய மாலைப்பொழுதின் சற்றே குறைந்த அமைதியிலும், ஆங்கங்கே இருக்கும் பயணிகளின் பதட்டமான மனநிலையிலும் நிரம்பியிருக்கும் ஒரு ரயில் நிலைய நடைமேடையில் எனக்காகவே காத்திருக்கும் ஒரு தேவதையின் அறிமுகத்திற்கு நிச்சயம் ஒரு ரயில் பாட்டு தேவைப்பட்டிருக்கும் இதுவே திரைப்படமாக இருந்திருந்தால்.
அவனது பெயர் வேலன் என்கிற வேலா
அவள் பெயர் கவிதா என்கிற கவி.

ஒலிவழி மட்டுமே அறிமுகமான அவளின் நிஜத்தை காணப்போகும் என்னுடைய பதட்டமும், அங்கே உள்ள மற்ற பயணிகளின் ரயிலின் வருகை பற்றிய பதட்டத்தையே ஒத்திருந்தது. ஆறாவது நடைமேடையில் காத்திருப்பதாய் சொன்ன அவளை பார்க்கும் அவசரத்தில் வாங்க மறந்த நடைமேடை சீட்டை நினைவூட்டிய பயணிக்கு நன்றி சொல்லியபடி நகர்ந்த நான் நிச்சயம் என்னையே அக்கணம் மறந்திருந்தேன் என்று சொன்னால் மிகையில்லை. சீட்டு வாங்க சென்ற அவ்விடத்தில் மூன்று ரூபாய்க்கு ஐம்பது ருபாய் கொடுத்து மீதி சில்லறை வாங்காமல் சென்ற என்னை எல்லோரும் ஏளனமாய் பார்த்திருக்க கூடும்.

பல வருடங்களுக்கு முன் ஏதோ ஒரு தேவ கணத்தில் பார்த்த அவளது முகம் எனது மனத்திரையில் எவ்வளவு முயன்றும் கொண்டு வர முடியாமல் தோற்றுப்போயிருந்த எனது மனது திரும்ப திரும்ப சொன்னது "என்ன அவசரம், இன்னும் சில வினாடிகளில் பார்க்க போகிறாய்".

அப்பாடா.. ஆறாவது நடை மேடை வந்தாயிற்று.. அந்த ரயில் நிலைய படிகளில் இறங்கிய என்னை தனது அம்மாவிடம் அழைத்து செல்ல காத்துக்கொண்டிருந்தஅவளது முகம் தனது எல்லா உணர்ச்சிகளையும் ஒளிபரப்பிக்கொண்டிருந்தது. கண்கள் விரிய, புன்முறுவல் பூக்க மிக ஆச்சர்யத்துடன் இருவரும்...

ஹேய், என்னடா ரொம்ப குண்டாயிட்ட.. எனது வயிற்றில் ஒரு செல்ல இடி இடித்தபடி கேட்ட அவளுக்கு நான் பதில் சொல்ல எனக்கு உண்மையிலேயே சில வினாடிகள் தேவைப்பட்டது. உன் முகம் எனக்கு நல்லா ஞாபகம் இருக்குடா, உனக்குதான் என் முகம் ஞாபகமே இல்லன்னு சொல்லிட்ட. சரி வா அம்மா காத்துக்கிட்டிருக்காங்க. ஏன் வர இவ்ளோ நேரம், நாங்க அரை மணி நேரம் முன்னவே வந்துட்டோம்.. டிரைவர் அங்கிள் எங்கள ட்ராப் பண்ணிட்டு கிளம்பிட்டாரு. ரயில் வர இன்னும் நிறைய நேரம் இருக்குன்னு நினைக்கிறேன்.. நீ எவ்ளோ நேரம் எங்க கூட இருப்ப... இந்த டி ஷர்ட் சூப்பரா இருக்குடா...
இப்படியாக கேள்வி கணைகளை தொடுத்து கொண்டிருந்த அவளது குழந்தைதனத்தை நான் அணு அணுவாக ரசித்துக்கொண்டிருந்ததை நிச்சயம் அவள் அறிய வாய்ப்பில்லை.

அம்மா நான் வர்றத பத்தி என்ன சொன்னாங்க? எதுவும் சொல்லலடா..
உங்க அம்மா முகம் எனக்கு ஞாபகம் இருக்கு, உன் முகத்தைதான் மறந்துட்டேன்..
இனிமேல் மறந்தினா உன்ன கொன்னுடுவேன் தெரிஞ்சிக்கோ... சரி...
ஹெலோ ஆண்ட்டி, எப்பிடி இருக்கீங்க... நல்லா இருக்கேன், வாப்பா, கவி சொன்னா வேலன் நம்ம பார்க்க வர்றான்னு...வீட்ல எல்லோரும் நல்லா இருக்காங்களா...
இருக்காங்க ஆண்ட்டி...நீ கடைசியா வீட்டுக்கு வந்து ரெண்டு வருஷம் இருக்கும்னு நினைக்கிறேன்..ஆமா ஆண்டி.. அப்போ நான் புனே ல இருந்தேன். இப்போ நான் பெங்களூர் வந்துட்டேன். கவிய அப்பதான் கடைசியா பார்த்தேன். அதோட இப்பதான் பாக்குறேன்.
ஹேய், நீ என்ன பாக்க வந்தியா... இல்ல எங்க அம்மாவ பாக்க வந்தியா...அவங்க கூடவே பேசிக்கிட்டிருக்க... உன்ன நான்தான் வர சொன்னேன், அவங்க சொல்லல...படபடவென பொரிந்தாள் கவி.
இவ எப்பவுமே இப்படிதான். யாருக்கும் மரியாதை கொடுத்து பேசவே மாட்டா..நீ தப்ப நினைசிக்காதப்பா.. கவி இதை விட கேவலமாக என்னை தொலை பேசியில் திட்டியிருக்கிறாள் என்று அவங்களுக்கு தெரியாது.
சரி சரி... சொல்லு... பரீட்சையெல்லாம் எப்படி பண்ணின..
ம்ம்.. உன் மொபைல கொடு... அதுல யார் போடோவேல்லாம் வச்சிருக்கன்னு பாக்கணும்.. யார் போடோவும் இல்ல.. இனிமேல் உன் போட்டோவதான் வெச்சிக்கணும்...
எனது அலைபேசியை வாங்கி அவள் டைப் செய்த முதல் மெசேஜ் "கவி வெட்ஸ் வேலா"
பைத்தியக்கரதனமா எதுவும் பண்ணாத.. அம்மா பார்த்தா என்ன நினைப்பாங்க...எப்பிடி பயப்படுறான் பாரு.. ஒரு கேலிப்புன்னகையுடன் அவள் பார்த்த ஒரு பார்வையை நான் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் மறக்க முடியாது.
இப்படியாக கழிந்த எங்களது விவரிக்க இயலாத விழி பேச்சுகளையும், அளவாக தேர்ந்தெடுத்து பேசிய வாய்ப்பேச்சுகளையும் காணவோ என்னவோ திடீரென்று கிளம்பிய மழை மேகங்களும், மிதமான வேகத்தில் வீசிய மழைக்காற்றும் அந்த சூழ்நிலையை மேலும் ரம்மியமாக்க.. நான் ஏதோ ஒரு மாயலோகத்தில் லயித்திருந்தபோது...
வேலா நீ வேணும்னா கிளம்புப்பா... மழை வரும்போல இருக்கு.. நீ ரொம்ப தூரம் போகணும் இல்ல.. நாங்க ரயில் வந்தா கிளம்பி போறோம்.. இது கவியின் அம்மா..கவி என்னை முறைப்பது போல் பார்த்தாள்..
இல்ல ஆன்ட்டி ரயில் வந்த பிறகே நான் கிளம்பறேன்... தனியாக இருக்கீங்களே.. அதுவும் இந்த நடைமேடையில் துணைக்கு கூட யாருமே இல்ல...
பரவாயில்லப்பா... நானும் கவியும் எல்லா இடத்திற்கும் தனியாகவே போவோம்.. தனியாகவே வருவோம்.. சரி ஆன்ட்டி.. யாருமே இல்லன்னா பரவாயில்ல... இப்பதான் நான் இருக்கேன் இல்ல..
இந்த வார்த்தை ஒரு சிறிய அளவிலான அதிர்வை இருவருக்கும் ஏற்படுத்தியிருக்க கூடும். அது அவர்களின் முகபாவங்களிலிருந்து என்னால் உணரமுடிந்தது..
வழக்கம்போல் கன்னியாகுமரி எக்ஸ்ப்ரெஸ் அரை மணி நேரம் தாமதமாக வந்து எனக்கு சந்தோசத்தையும் மற்ற பயணிகளுக்கு எரிச்சலையும் கொடுத்தது. கவியின் அம்மா லக்கேஜை எடுத்துக்கொண்டு முன்னே செல்ல.. நானும் கவியும் ஒரு ஒரு பை மற்றும் சூட்கேசுடன் பின்னே நடந்து சென்றோம் அந்த ஏசி கம்பார்ட்ட்மேன்டை நோக்கி.
அவள் என்னை இடிப்பதும் நான் அவளை உரசுவதுமான மெல்லிய ச்ச்பரிசங்களுடன்.. முதல் நாளே உன் லக்கேஜ் தூக்க வெச்சிட்டியே.. இது நான்..
நீ வெச்சிருக்கும் பையில என்னோட சுடிதார் மட்டுதான் இருக்கு.. அதனால தப்பில்ல கொஞ்ச நேரம் தூக்கிட்டு வா... கவி பத்திரமாய் ஏறு.. கவி அம்மா பதட்டத்துடன் ரயிலுக்குள் செல்ல.. அரை மனதுடன் கவி பின்தொடர.. நான் எனது இதயத்தை பத்திரமாக கவியிடம் தொலைத்துவிட்டு நடைமேடையில் நின்றுகொண்டிருக்க.. கூவென கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் எங்களது காதலை இந்த உலகத்துக்கு உரைத்துக்கொண்டு நகர..மழை மேகம் சிறு தூறலாய் என் மேல் பட்டு சிதறிக்கொண்டிருந்தது..
சீ.. இந்த ஏசி பெட்டியில் ஏன் முழுவதும் கண்ணாடியால் மூடிவைத்திருக்கிறது,இதே ஜன்னலாக இருந்திருந்தால் நிச்சயம் நான் அவளை மேலும் சில வினாடிகள் ரசித்திருக்க முடியும்.. எப்படியோ... நிறைந்த மனதுடன் நான் ரயில் நிலையத்தை விட்டு சென்றுகொண்டிருக்க கவி முழுவதுமாய் என்னை ஆக்கிரமிக்க தொடங்கிவிட்டிருந்தாள்.

(தொடரும்)

Thursday, February 12, 2009

அன்புள்ள வலையுலக பதிவர்களுக்கு வணக்கம்.